Wednesday, October 21, 2020

கூரை

மேற்க்கூரை வேய்ந்திடினும்
மனசித்தி பெற்றோமில்லை
அண்டிப்பிழைக்கும் அன்னதானக்
கோமகனும் இன்புறுவானில்லை

ஆழியிலே உண்டோ
நுரைக்குமிழியிலே உண்டோ
வேள்வியிலே உண்டோ
கேள்வியிலே உண்டோ
சக்கரத்தில் உண்டோ
நின்று சுழலும் அச்சிலே உண்டோ
வான் நகையில் உண்டோ
மின்னும் மின் மினியிலே உண்டோ
கண்ணில் உண்டோ
வீழும் கண்ணீர்த் துளியிலே உண்டோ

ஆராய்ந்துக் களைப்புற்று 
கண்விழித்து பார்த்தனன்
நெற்றியின் உள்ளே நின்றொடும்
எம் மனக் குதிரை






No comments:

Post a Comment